Monday, June 5, 2017

காரணப்பட்டு அருள் நிலைய திறப்பு அழைப்பிதழ்

காரணப்பட்டு அருள் நிலைய திறப்பு  அழைப்பிதழ்

சுத்த சன்மார்க்க அன்பர்கள் அனைவருக்கும் வந்தனம். எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால், வள்ளற்பெருமானின் அணுக்கத்தொண்டர் – சமரசபஜனை – காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை அவர்களின் ஜீவ சமாதியான “அருள்நிலையம்” புதுப்பிக்கப்பட்டு 08-06-2017 அன்று வள்ளற்பெருமானின் அருள் பார்வையின் முன்னிலையில் திறப்பு விழா காணவுள்ளது.

இவ்விழா 07-06-2017 மற்றும் 08-06-2017 ஆகிய இரண்டு நாட்களும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் இங்கே இணைக்கப்பட்டு தங்களது  மேலான பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனையே தங்களுக்குரிய அழைப்பிதழாகக் கொண்டு, வள்ளற்பெருமானே கலந்துக் கொள்ளும் இவ்விழாவில் தாங்களும் தவறாமல் கலந்துக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளுக்கு அருகாமை பெற பேரன்போடு அழைக்கின்றேன்.

இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவினை முழுதும் ஒளிப்பதிவு செய்ய சென்னையிலிருந்து “அருட்ஜோதிடெலிவிஷன்” அன்போடு இசைந்துள்ளார்கள். மேலும் இரண்டு நாட்களிலும் வருகை தரும் அன்பர்களுக்கு “வள்ளலார்தீஞ்சுவை நீரோடை தருமச்சாலை”- அருளாளர் நந்திசரவணன் அவர்கள் அன்னதானம் வழங்கி மகிழ்கின்றார்.

அனைவரும் வருக…. அருள் நலம் பெறுக…

தி.ம.இராமலிங்கம்.

கடலூர்.



No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.