Friday, April 24, 2020

நோயற்ற வாழ்வு


நோயற்ற வாழ்வு

(தி.ம.இராமலிங்கம்)


உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்புஇடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர்இடை நட்புஅறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே. (திருமந்திரம்-2148)

முதல் வரியில் திருமூலர் அவர்கள் கூறுகின்ற மூன்று தேகங்கள் என்னென்ன? என வள்ளலார் வரும் முன் யாருக்கும் தெரியாமல் இருந்தது. வள்ளலார் வந்தப் பின்புதான் அந்த மூன்று உடம்பின் பெயர்களையும், தான் பெற்ற அந்த முத்தேக சித்தி அனுபவத்தையும் திருவருட்பாவின் மூலம் மக்கள் அறிய முடிந்தது.

சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என்கின்ற மூன்று தேகத்தையே திருமூலர் தனது முதல் வரியில் குறிப்பிடுகின்றார். இந்த மூன்று தேகங்களும் ஒன்றை ஒன்று தழுவிக்கொண்டுள்ளது. இம்மூன்று தேகங்களுக்கு இடையேதான் நமது உயிர் உள்ளது. இம்மூன்று உடல்களை வளர்த்தால்தான் உயிரை வளர்க்க முடியும் என்று திருமூலர் வேறொரு பாடல் வழியாக போதித்துள்ளார். (உடல் வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.)

ஆனால் நாமெல்லாம், நமது உயிரான ஆன்மாவிற்கும் இம்மூன்று உடல்களுக்கும் உள்ள நட்பை அறியாமல் உள்ளோம். நமது பருஉடல் இருக்கும் வரை அதனுடன் உயிர் நட்பாக இருக்காது. எப்போது நமது பருஉடலானது சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம் என மாற்றமடைகின்றதோ அந்நிலையில்தான் நமது பருஉடலுடன் நமது உயிரும் நட்புடன் என்றும் நிலைத்து நிற்கும். இதுதான் மரணமில்லா பெருவாழ்வு. இதனை அடைந்தவர் வள்ளலார்.

இம்மூன்று தேகத்தை நாம் எடுக்கும்வரை, நமது ஆன்மாவானது மடம்புகு நாய் போல மயங்கியிருக்கும் என்கின்றார் திருமூலர். நமது ஆன்மாவை நாய் எனவும், நமது பருஉடலை மடம் எனவும் உருவகப்படுத்துகின்றார். அக்காலத்தில் சைவ மடங்களில் சித்தாந்த பயிற்சி நடக்கும். அப்படிப்பட்ட சித்தாந்த பயிற்சி நடக்கும் இடத்தில் ஒரு நாய் புகுந்துவிடுகின்றது. அது சித்தாந்தத்தை நாடாமல் சோற்றுக்காக மடப்பள்ளியை நாடுமாம். அதாவது நமது மடம் என்கின்ற பருஉடலில் நாம் சித்தாந்த பயிற்சி கொடுக்கவில்லை எனில் நமது ஆன்மாவனது நாயைப்போல, இவ்வுடலில் ஏன் வந்தோம் எனப்புரியாமல் மயங்கி மடத்தனமான வேலைகளை செய்துக்கொண்டிருக்கும். அதனால் அன்பர்களே நாமெல்லாம் சுத்த சன்மார்க்க சித்தாந்த பயிற்சியினை நமது உடம்பிற்கு கொடுக்க வேண்டும். நமது ஆன்மாவை காப்பாற்ற வேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழுகின்றது. கொரோனா என்கின்ற ”கோவிட் 19” என்பது ஒரு நுண்ணுயிரி. அது போல நமது ஆன்மாவும் ஒரு நுண்ணணுதான். நான் இருக்கும் உடம்பில் எனக்கு எதிராக ஒரு நுண்ணுயிரி வந்து, நான் இருக்கும் இந்த உடம்பை அழிக்க நினைக்கின்றதே என ஏன் நமது ஆன்மாவனது அந்த நுண்ணுயிரிடம் போரிடவில்லை? உடம்பு மட்டுந்தானே போராடுகின்றது! அது ஏன்?

நாம் நமது ஆன்மாவை நாயைப்போன்று வைத்திருந்தால் அது எப்படி போராடும்? அதுவே இந்த உடம்பில் நாம் ஏன்டா வந்தோம்? எனப்போராடும்போது, இந்த உடம்பிற்காக போராடும் நிலையில் அது இருக்காது.

கொரோனா போன்ற நோய்களுக்காக நமது ஆன்மா போராடு வேண்டுமானால், இரண்டு வழிகள் உள்ளன.

1. ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் தர்மம் செய்ய வேண்டும். அப்போது அந்த தர்மம் நமது ஆன்மாவை போராடத்தூண்டும். “தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும்” என்பது சினிமா பாடல் மட்டுமல்ல. உண்மை உரைக்கும் பாடலும் கூட. தர்மத்தோடு கூடியவன் தேகநஷ்டம் அடையமாட்டான் என வள்ளலார் கூறுவார்.

   2. அடுத்த வழி என்னவென்றால், நமது பருஉடலை மூன்று தேகத்தில் ஏதேனும் ஒரு தேகமாத்திரத்திலாவது மாற்ற முயற்சிக்க வேண்டும். முதலில் சுவர்ணதேகமாக்கிக்கொண்டால் ஆன்மா அத்தேகத்தில் அரசனாகி ஆளதொடங்கிவிடும். பிறகு உடல் நோய் என்ற பேச்சுக்கே இடமில்லை, மரணமும் இல்லை. இந்த மூன்று தேகத்தின் நிலை எப்படிப்பட்டது என தெரிந்துக்கொள்ள திருவருட்பா ஓதவும்.

for e-book                
https://drive.google.com/file/d/136yfLc-UUpyoOVx5OHb9ox-YfE0n0Dsa/view?usp=sharing

1 comment:

  1. உங்களுக்கு நிதி தேவையா? நீங்கள் நிதி தேடுகிறீர்களா? உங்கள் வணிகத்தை பெரிதாக்க நிதி தேடுகிறீர்களா? தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வணிக விரிவாக்கத்திற்கான நிதி பெறவும், எந்த அளவிலும் ஒரு புதிய வணிகத்தை அமைக்கவும் நாங்கள் உதவுகிறோம். 3% மலிவு வட்டி விகிதத்தில் நிதி பெறுங்கள், வணிகத்திற்கும் உங்கள் பில்களை அழிக்கவும் உங்களுக்கு இந்த நிதி தேவையா? மேலும் தகவலுக்கு இப்போது எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள் (Financialserviceoffer876@gmail.com) whats-App +918929509036 வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும்

    ReplyDelete

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.