Wednesday, December 16, 2015

ச.மு.க. அவர்களின் 91-ஆம் ஆண்டு குருபூஜை

ச.மு.க. அவர்களின் 91-ஆம் ஆண்டு குருபூஜை

இன்று (16-12-2015) காலை, வள்ளலாரின் அணுக்கத் தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்களின் 91-ஆம் ஆண்டு குருபூஜையானது காரணப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது.

காலையில் திரு அருட்பெருஞ்ஜோதி அகவல் படிக்கப்பட்டு கொடியேற்றத்துடன் குருபூஜை துவங்கியது. திருவருட்பிரகாச வள்ளற்பிரானின் திருவடிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தேறின. காரணப்பட்டு அன்பர்களால் சமரச பஜனையும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரு அருட்பா அருணாச்சலம் ஐயா அவர்கள் சிறப்பு சொற்பொழிவினை ஆற்றினார்கள். வள்ளலாரின் வல்லமைகளையும், காரணப்படு ஐயாவின் சேவைகளையும் எடுத்துரைத்தது மிக அருமையாக இருந்தது.

மதியம் 01.30 மணியளவில் காரணப்பட்டு ச.மு.க. ஐயாவின் ஜீவ சமாதிக்கு பூஜைகள் செய்யப்பட்டது. அவ்வமயம் காரணப்பட்டு கிராம வாசிகள் பெருவாரியாகக் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். மேலும் சென்னை, வடலூர், அரியாங்குப்பம், புதுவை, கடலூர் போன்ற பல பகுதிகளிலிருந்து சன்மார்க்க அன்பர்கள் வந்திருந்தனர். தங்கஜோதி ஞானசபை அன்பர்களும் வந்திருந்து ஞானதான நூல்களையும் வள்ளலாரின் கொள்கை பரப்பு ஏட்டினையும் அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர்.

சென்னை-அம்பத்தூரிலிருந்து வந்திருந்த திரு.B.குமார் அவர்களும் சென்னை கவரப்பட்டு சன்மார்க்க சங்கத்தினரும், காரணப்பட்டு ஐயாவின் வரலாற்றினை பிரதி எடுத்து இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனர்.

காலை மற்றும் மதியமும் அன்னதானம் நடைபெற்றது. காரணப்பட்டு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் திருமதி.ஜெயந்தி ராமலிங்கம் அவர்களும், K.V.S.இராமலிங்கம், நிலவள வங்கித் தலைவர் கடலூர் அவர்களும் முன்னின்று அன்னதானத்தை வழங்கி மகிழ்ந்தனர்.

காரணப்பட்டு ச.மு.க. அவர்களின் வழித்தோன்றல்கள் திரு.அ.திருநாவுக்கரசு, திரு.அ.மணிவண்ணன், திரு.அ.முருகாநிதி மற்றும் குடும்பத்தினர்கள் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.   















No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.