Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 2


அருட்ஜோதி ஆலாபனை


இரவிலந்த சத்சித்த விந்தை
உருகலந்து தித்தித்த எந்தை
அருநினைந்து விக்கித்த சிந்தை            - எனதாக

தவமுதல்வ சித்தத்து நின்று
சபைஉழன்று சுத்தத்து விண்டு
ஒருஇரண்டு அத்தத்து ஒன்றி                - மயமாக

மருவுமங்கை முத்தத்து முங்க
பெருகுகொங்கை திக்கத்து நின்ற
இளகுநெஞ்சை பித்தத்து துஞ்சு            - மடமாயை

அருளுகின்ற பக்கத்து வந்து
இருளுகின்ற பற்றற்று நின்று
இனியஅன்பை சிக்கற்று வென்று        - முடிசூட

சமயமன்ற பத்தற்று எஞ்சி
மதசடங்கு அக்கக்கு நஞ்சி
இலகுதர்ம மக்கட்கு தங்கி                    - அருளாக

அறஒழுங்கு மட்டற்று விஞ்சி
நரகமின்றி கட்டுற்று அஞ்சி
மரணமின்றி கட்டற்று பொங்கி            - பெருவாழ

மனமழுந்த இச்சித்து இங்கு
தினவிருந்து பிச்சித்து தெங்கு
தனமருந்து உச்சத்து தங்கு                   - அணியாக

அருளவல்ல புத்தத்தை நம்பி
விலகவல்ல பச்சயத்தை அண்டி
உழலவல்ல யுத்தத்தை மண்டி              - இடயேக

அரியபொன்னு பொற்சுத்த வண்ண
பிரணவன்ன சொற்சுத்த எண்ண
துரியவண்ண சத்சுத்த உண்ண             - த்ரிதேக    

உலகசங்க முற்றத்தை எய்தி
சமரசசங்க வித்தத்தை தந்து
அமரஅங்க சத்தியத்தை என்று             - மறவேனே!
------------------------------------------------------------------------------------
சுத்தத்திரு சித்தத் தவநிலை
சத்துக்கொரு ஒத்தத் தலைவன
புத்துத்தொளி சுத்தித் தருகிற                - சுயஜோதி

பற்றுக்கொரு முற்றுத் தடைபட
சுற்றுச்சதி அற்றுக் குலைபட
கற்றக்கலை நிற்கத் தலைபட               - மணமாகப்

பட்டுத்தெரி வித்தக் கலையினை
கட்டுக்களி நட்டத் தலைவனை
எட்டுத்திசை வட்டப் புலவனை           - மறவேனே

துக்கத்துளைச் சிக்கிச் சிறைபட
பக்கத்துணை நிக்கக் கதிரொளி
முக்தித்தனை முக்கிப் பரவெளி            - நடமாடப்

பச்சைத்திரை அச்சுத் திருடனை
பிச்சுப்பட எச்சத் துருவனை
நச்சுப்பகை இச்சைத் திரையனை         - புறமேவத்

தப்புத்துடை துப்புக் கடவுளை
அப்புத்துவக் கப்பக் கடலிடை
உப்புத்தகு ஒப்பக் கரைபடக்                - கடவேனே

கள்ளச்சபை பள்ளிக் கொளஎனைத்
தள்ளித்திரு அள்ளிக் கொளவினை
எள்ளிப்பகை துள்ளித் துயருரக்            - குருவானைக்

கட்டிப்பிடி தட்டுத் திரைமறை
விட்டுப்படி மொட்டுத் தலையனை
தட்டிக்கொடு விட்டத் தொளிதனை      - நிறைவாக

வித்தைப்பல தத்தித் திகழொளி
அத்தைத்தர முத்தித் தயவென
நித்தத்தற புத்தத் தழகனை                   - உறவாகச்

சிந்தைச்செய மந்தைத் தளைவிட
சிந்துக்கவி பந்தல் பரவிட
பந்தப்பெரு இன்பம் தருகிட                - வருவாரே!
-----------------------------------------------------------------------------------------
தருமம்மிகு லிங்கனை நெஞ்சனை
புருவம்நடு சிந்தனை கண்டனை
உருகும்மன அந்தனை வெண்ணுடை             - கணவானை

அமுதம்தரு குண்டலி வண்டனை
கனகம்தகு கண்மணி கண்டனை
அகரம்எழ நெஞ்சொலி தந்தனை                   - அகமாக

கலியும்விட நன்னடை நல்கிட
பலியும்விட அன்புடை நின்றிட
வலியும்விட வன்திரை அன்றிட                     - நிலையாக

வனமந்தியை தன்நிலை சொல்லினு
இனசிந்தையை முன்நிலை பண்ணுகை
அதைஒன்றிய என்நிலை அய்யனை               - பிடித்தேக

சபைதந்தனை புன்பசி அன்னனை
கதைவிண்டனை வன்மத தண்டனை
தருவிந்தனை மன்மத கண்ணனை                  - மனதூ

விருதம்என வன்புலை உண்பதை
பலரும்விட பின்அதை உண்பதை
தினமும்கொள அன்பினை கொன்றனை        - மனமாற

தயவும்அற கல்வியு மொன்றிய
தவமும்நடு கண்ஒளி அண்டிய
உடலும்நட நல்சபை யும்பெற                       - பெருமானை

நினையும்மன எண்ணமு முந்திய
வினையும்அற திண்ணமு மிஞ்சிய
இணையும்திற சங்கமு மெய்துற                     - அருளானை

சபையன்சத சங்கம வெண்ணொளி
அபையன்மத சங்கதி பொய்யென
உடையன்நித மும்அவ னின்முக                     - நினையானை

அடியன்இறை வன்என எங்குமு
டையவன்அக இன்பமு றும்மது
அமுதன்நிஜ அன்பன வன்அடி                      - பணிவேனே
---------------------------------------------------------------------------------------
                                               தி.ம.இராமலிங்கம் – கடலூர்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.