Sunday, August 28, 2016

அருட்ஜோதி ஆலாபனை - 3


அருட்ஜோதி ஆலாபனை

சிதம்ப ரந்தனை பெயரொடு
பரம்ப ரந்தனை உடலொடு
நடம்ப லந்தனை உயிரொடு                - இணையானை

கனத்த சிந்தனை பொடிபட
சினக்க புன்புலை களைவிட
நினைத்த விண்ணனை பிடிபட            - உளவாக

இரக்க சங்கம அடலிடை
பிறக்க கங்குலு பகலிடை
சிறக்க எங்கிலு மொருபடை                 - இனிதேக

எனக்கு உன்துணை அறமுற
வகுத்த விண்ணினை திறமுற
சுகித்து விண்டனை நிறமற                  - அருவாக

வடக்கு லிங்கனை அடிதொழ
கிழக்கு திங்களை அகமெழ
வழக்கு எங்களை விடஎழ                    - ஒளியாக

வெளுப்பு மஞ்சளை கொடிஎன
அமைத்து மஞ்சணை உயிரென
சமைத்த விஞ்ஞனை நடுவென            - அகமேவ

விருப்பு நெஞ்சினை விடமென
வெறுப்பு நஞ்சினை மடமென
அறுத்து பஞ்சென பறபற                    - வெளியாக

கலப்பு எண்திரை விலகுற
உவப்பு எண்திசை நிறையுற
நடப்பு கண்தசை பிளவுற                    - இறையாக

அருட்பெ ரும்ஒளி எனைவுற
தனிப்பெ ருங்கரு ணைமகிழ
இனித்த நெஞ்சக மதியுற                     - உனைப்பாட

அசுத்த ஐங்கர ணமுநினை
நினைக்க தங்கமு னைகளென
முளைக்க அங்கமு மொளியென           - ஒளிதானே!  
--------------------------------------------------------------------------------------
கனவு தானென வந்தன சென்றன
நனவு போலென நன்னிலை என்றன
தரும னாகிய உன்னிலை ஒன்றது                  - உருவான

உடலை வானென எய்திய விந்தனை
நடன நாதனை நன்னிய எந்தனை
கடவு பாதனை என்னிலை வந்தனை             - பொதுவான

உலக போதனை தந்தனை இங்கெனை
கலக சோதனை விண்டனை மண்மத
சமய ஈனனை வெந்தனை வென்றனை          - புகழான

கருணை ஜோதியை எந்தவ உந்தியை
உலக நீதியை கண்ணென உண்மையை
அறிய ஆதியை அந்தியை வெல்லுக              - உனதாணை

புரிய வோஎனை இந்நிலை எய்தியதை
இனிய ஊனென விண்கலை எல்லையதை
நுகர வோஎது வுந்தனை அல்லனை               - அடிமேவ

மகிமை நானென என்றனை தன்னிலை
அருக ஊனென நின்றனை விந்தினை
இணைய நாதமு மன்றனை என்தவ               - அலையானை

அருமை நாயக அன்பனை சந்தன
நறும தேகனை அம்பல வண்ணனை
மதுர வேதனை என்சுக மன்னனை                 - முகமேவ

தரும வீதிந டந்தும லர்ததை
அறிவு நாடுஅ டைந்துவ லங்கலை
அழிவு தேகம றந்திட பிங்கலை                     - உடையானை

அழகு ஞானம டைந்துவ ளர்கிற
பழகு ஜீவஇ ரங்கலை முந்தைய
நிலைய ஆதிவ ரங்களை ஒன்றின                  - எனதான

பழைய ஆணவ அன்பினை நிந்தனை
விழைய பூமண இன்பனை அங்கனை
இழைய தீகுண நண்பனை எந்தனை              - மறவேனே!
------------------------------------------------------------------------------------------
வந்தனம் சொன்னவனை சந்தனம் சொந்தமதை
பந்தனம் பன்னுவதை                                   - நினையாத

வஞ்சனம் மிஞ்சியனை கஞ்சனங் கன்மமனை
மஞ்சனம் துஞ்சுவதை                                   - குணமாக

எஞ்ஞனம் கொஞ்சிஅதை பஞ்சணம் கொண்டஎனை
அஞ்சுகம் தஞ்சமதை                                     - நடையாக

மங்கலம் மங்கைஅழ எங்குலம் என்றணைய
சங்கமம் அங்கமதை                                      - இனிதாக

விண்ணகம் சென்றவரை மண்ணகம் விண்டுவர
எண்ணகம் கொண்டவனை                           - பரமாக

வெண்துகில் கொண்டவரை ஐந்தொழில் கண்டவரை
கண்கவர் கண்ணவனை                                - உயிராக

வெஞ்சுடர் விஞ்சுவரை நெஞ்சகம் சென்றவரை
நஞ்சிடர் வென்றவனை                                - துணையாக

முந்திசொல் அந்தமதை மந்திரம் என்றவரை
சந்திமுன் கண்டவனை                                  - அறமாக

என்னவன் சொல்லியதை இன்னருட் சொல்லதனை
அன்பருள் சங்கமனை                                   - அருளாக

என்னுயிர் அன்பதனை உன்னுயிர் கண்பதிய
என்தவம் செய்ததனை                                   - அறியேனே!
-------------------------------------------------------------------------------------------
                                                 தி.ம.இராமலிங்கம் – கடலூர்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. Welcome to your Comments.